மும்பை துறைமுகத்தில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள 191 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - குழாய்களில் வைத்து நூதன முறையில் கடத்திய 2 பேர் கைது
Aug 10 2020 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிராவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நவி மும்பையில் உள்ள நவசேவ துறைமுகத்தில் சுங்கத்துறை மற்றும் வருவாய் நுண்ணறிவுத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். மூங்கில் குழாய்களில் மறைத்துவைத்து கடத்திவரப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 191 கிலோ போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இவை, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.