நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு - மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Aug 4 2020 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி தொடரப்பட்டு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்துக்கு எதிராக அவரது காதலி ரியா சக்கரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை, மகாராஷ்டிரா போலீசார் விசாரித்து வரும் நிலையில், சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் இருப்பதால், அதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெறுகிறது.