அரசியல்வாதிகளை குறி வைக்கும் கொரோனா தொற்று - அமித்ஷா, எடியூரப்பா உள்ளிட்டோரை தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் கொரோனா உறுதி
Aug 4 2020 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 600 நெருங்கியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தற்போது, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா-வுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திரு. சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அளித்த பரிந்துரையின்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்மையில் தன்னை தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதனை செய்து, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திரு. சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார்.