குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞரை நியமிக்க மத்திய அரசுக்கு அனுமதி - பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
Aug 4 2020 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக வாதாட, வழக்கறிஞரை நியமிக்க, மத்திய அரசுக்கு அனுமதி அளித்து, பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக, பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவருக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு, சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, ஜாதவுக்கு அனுமதி அளிக்கும் படி, பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில், ஜாதவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கி உள்ளது.
விசாரணையின் போது, ஜாதவ் சார்பில் வாதாடுவதற்கு, வழக்கறிஞரை நியமிக்க, இந்தியாவுக்கு அனுமதி அளித்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.