டெல்லியில், அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து- கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு அரசு அறிவிப்பு

Jul 11 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, டெல்லியில், அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவை தேர்வுகளை நடத்திக்‍கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து, பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள், செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது. ஆனால், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில், அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை முதலமைச்சர் திரு. மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00