நாட்டிலேயே தமிழகம் மற்றும் குஜராத்தில்தான் போலீஸ் காவல் மரணங்கள் அதிகம் - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
Jul 11 2020 2:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மற்றும் தமிழகத்தில் அதிக அளவிலான போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018-ம் ஆண்டின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் 70 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 14 மரணங்களும், தமிழகத்தில் 12 மரணங்களும், ஆந்திராவில் 11 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மஹாராஷ்ட்ராவில் 7 பேரும், ராஜஸ்தானில் 5 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 4 பேரும், அசாம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பஞ்சாப், தெலங்கானா, பீகார், ஜார்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர். இந்த சிறைச்சாலை மரணங்கள் உட்பட காவல் நிலையங்களில் நடைபெற்ற எந்த மனித உரிமை மீறல்களுக்கும் இதுவரை எந்த போலீசாரும் தண்டிக்கப்படவில்லை என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.