தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், மூணாறில் பதுங்கலா? - போலீசார் தீவிர கண்காணிப்பு

Jul 11 2020 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள தங்கக்கடத்தல் தொடர்பாக தேடப்படும் ஸ்வப்னா சுரேஷ் மூணாறில் பதுங்கியிருக்கலாம் என்றும், அல்லது அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, தூதரக அலுவலக முன்னாள் ஊழியர் சரித் குமாரை சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்தனர். இந்த கடத்தலில், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஸ்வப்னா தரப்பில், தற்போது மூணாறில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பியிருக்கலாம் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், Fazil Fareed, Sandeep Nair ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00