லடாக் எல்லையில் இந்தியாவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரோந்து - சீனாவின் ஊடுருவலை கண்காணிக்க நடவடிக்கை
Jul 11 2020 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவை ஒட்டிய லடாக் எல்லையில் அந்நாட்டின் ஊடுருவலை கண்காணிக்கும் விதமாக அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியா ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
கடந்த மாதம் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா - சீனா இடையேயான எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனால் இந்தியா எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற லடாக் எல்லை நெடுகிலும் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை கொண்டு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் ஹைட்ரா ராக்கெட் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகளை தாங்கி சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும். அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட 17 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.