இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 22 ஆயிரமாக அதிகரிப்பு
Jul 11 2020 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது.
நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 861 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாதிப்பு இரண்டரை லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 261 பேருக்கும், டெல்லியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 140 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.