மஹாராஷ்டிராவில், கொரோனாவுக்கு காவல்துறையினர் 74 பேர் பலி - இதுவரை சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதிப்பு
Jul 11 2020 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிராவில், கொரோனாவுக்கு இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 74 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், ஊரடங்கு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில், காவல் துறையைச் சேர்ந்த 222 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இதுவரை சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.