புதுச்சேரியில், ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி நீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை
Jul 11 2020 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்ததாலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. தனவேலுவை, அப்பதவியில் இருந்து சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தனவேலு காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா திரு. அனந்தராமன், சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் மனு அளித்தார். இதனையடுத்து, தனவேலுவை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.