விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் - திட்டமிட்ட செயல் என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு
Jul 10 2020 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேசத்தில், ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான திரு. அகிலேஷ் யாதவ், இது திட்டமிட்ட செயல் என விமர்சித்துள்ளார். விகாஸ் துபேவை அழைத்துச்சென்ற கார் கவிழவில்லை என்றும் அது கவிழ்க்கப் பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு தனது ரகசியத்தை காப்பாற்றிக்கொள்ளவே காரை கவிழ்த்து விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. திக்விஜய்சிங் கூறுகையில், உஜ்ஜைனியில் பதுங்க கோவிலை விகாஸ் துபே ஏன் தேர்வு செய்ய வேண்டும்? மத்திய பிரதேசத்தில் விகாஸ் துபே பதுங்குவதற்கு உதவி செய்தது யார்? என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.