நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்பாக மீண்டும் ஆய்வு நடத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு
Jul 10 2020 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்பாக மீண்டும் ஆய்வு நடத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவும் வேகம் மற்றும் அதன் தடமறிதல் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஏற்கெனவே ஆய்வு நடத்தியது. நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிடவில்லை. கொரோனாவின் போக்கை கண்டறிவதில் இந்த கணக்கெடுப்பு முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, கொரோனா பரவல் தொடர்பாக மேலும் ஒரு ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் முடிவெடுத்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது