இந்தியா - நேபாளம் இடையே அதிகரித்து வரும் உறவு விரிசல்: இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கு தடை
Jul 10 2020 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் தூர்தர்ஷன் நீங்கலாக பிற இந்திய சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலெக் கணவாய் பகுதிகளை உரிமை கொண்டாடி வரும் நேபாளம் புதிய வரைபட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மேலும், தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியாவில் சதித் திட்டம் தீட்டப்படுவதாக நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ஆதரமற்ற குற்றச்சட்டை தெரிவித்தார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே அசாதாரணமற்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், தூர்தர்ஷன் நீங்கலாக பிற இந்திய சேனல்களுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு எதிரான தேசவிரோத செய்திகளை ஒலிபரப்புவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.