சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது : மத்திய அரசுக்கு ராகுல்காந்தி பதிலடி
Jul 9 2020 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளுக்கு பெறப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது என திரு. ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான 2 ராஜீவ்காந்தி அறக்கட்டளைகள் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றிற்கு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ள திரு. ராகுல் காந்தி, சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருப்பதாக பிரதமர் திரு. மோதி கருதுவதாகவும், ஆனால் உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் போராடுபவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலை போக மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.