கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் வெளியாட்கள் வந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் : தண்டோரா மூலம் எச்சரிக்கை
Jul 9 2020 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில், வெளியாட்கள் வந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்தும், தமிழகம், கேரளாவிலிருந்தும், சாம்ராஜ் நகரில் நுழைந்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென, ஊராட்சிப் பகுதிகளில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இதனை மீறி வருவோர் குறித்து தகவல் தந்தால் 2 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.