உத்தரப் பிரதேசத்தில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் விகாஸ் துபே கைது - விசாரணைக்‍காக கான்பூர் கொண்டு சென்றது போலீஸ்

Jul 9 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் 8 காவலர்கள் கொல்லப்பட்ட வழக்‍கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்‍கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டான்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே மீது கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, கொலைமிரட்டல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனைப்பிடிக்‍க, அவன் தங்கியிருந்த திக்‍ரு கிராமத்திற்கு சில தினங்களுக்‍கு முன்பு சென்ற காவலர்கள் மீது, ரவுடி கும்பல் நடத்திய தாக்‍குதலில் 8 காவலர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் உத்தரப்பிரதேத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர்களை கொன்று தப்பியோடிய ரவுடி கும்பலை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்‍கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ரவுடி விகாஸ் துபேயின் வீடு, பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் தரைமட்டமாக்கப்பட்டது. அவனது முக்‍கிய குற்றவாளி அமர் துபே நேற்று சுட்டுக்‍கொல்லப்பட்டான். மற்றுமொறு முக்‍கிய கூட்டளி, இன்று காலை கான்பூரில் நடந்த என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்‍கொல்லப்பட்டான். இந்நிலையில், முக்‍கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00