கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து பின்வாங்கியது சீனா - 2 கிலோ மீட்டர் தூரம் வரை விலகிச் சென்றதாக தகவல்
Jul 6 2020 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீனப் படையினர் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கில், அண்மையில் இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனத் தரப்பிலும் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது படைகளை விலக்கிக் கொண்ட சீனா, அதற்கு மாறாக தடைகளை குவித்து வந்தது.
சீன ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில், இந்தியாவும் துருப்புகளை நிறுத்தியது. இந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து 2 கிலோ மீட்டர் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.