கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க கேரளாவில் ஓராண்டு காலத்திற்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - அம்மாநில அரசு அறிவிப்பு
Jul 6 2020 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மேலும் ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக தற்போது உள்ள கட்டுப்பாடுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகள் அடுத்த ஆண்டு ஜூலை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.