உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்கித் தாருங்கள் - இளைஞர்களுக்கு பிரதமர் மோதி அழைப்பு
Jul 5 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க, இளைஞர்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளின் உறவில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சூழலில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது.
இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க, இளைஞர்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செயலிகளை உருவாக்குவதற்கான பார்வை மற்றும் நிபுணத்துவம் இருப்பவர்கள், இதற்கான முயற்சியில் இறங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.