டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தாலும் மருத்துவமனைக்கான தேவை பெரிதாக இல்லை -10 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்
Jul 5 2020 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே குணமடைந்து வருவதாகவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிங்களின் பட்டியலில் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. தலைநகரில் அதிகரித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து, 10 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட சிறப்பு தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ளன. இந்நிலையில், டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதாகவும், பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே குணமடைந்து வருவதாகவும், முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதனால், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 9 ஆயிரத்து 900 படுக்கைகள் காலியாக உள்ளதாக அவர் கூறினார்.