மகாராஷ்டிராவில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று எண்ணிக்கை - வைரஸ் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு
Jul 5 2020 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கும் மஹாராஷ்ட்ராவில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
மஹாராஷ்ட்ராவில் ஒரேநாளில், 7 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 64-ஆக அதிகரித்துள்ளது. இதில், 83 ஆயிரத்து 311 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 82 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 671-ஆக உயர்ந்துள்ளது. மஹாராஷ்ட்ராவில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 205-ஆக அதிகரித்துள்ள நிலையில், 68 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.