உத்தரப்பிரதேசத்தில் 8 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - ரவுடி விகாஸ் துபேவின் முக்கிய கூட்டாளியை கைது செய்தது போலீஸ்
Jul 5 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் 8 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தீவிரமாக தேடப்பட்டுவரும் ரவுடி விகாஸ் துபேவின் முக்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி துபே மீது கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, கொலைமிரட்டல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனைப்பிடிக்க, அவன் தங்கியிருந்த திக்ரு கிராமத்திற்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற காவலர்கள் மீது, ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் 8 காவலர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் உத்தரப்பிரதேத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர்களை கொன்று தப்பியோடிய ரவுடி கும்பலை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையில், ரவுடி விகாஸ் துபேவின் முக்கிய கூட்டாளியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.