உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள உச்சகட்ட சவால்களிலிருந்து மீண்டுவர புத்தரின் போதனைகள் துணை நிற்கும் - பிரதமர் நம்பிக்கை
Jul 4 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புத்தரின் கோட்பாடுகள் உலகின் இன்றைய மிகப்பெரிய பிரச்னைகளுக்கு தீர்வுகாண உள்ளதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
புத்தமதத்தின் தர்ம சக்கர நாளான இன்று கவுதம புத்தரின் போதனைகள் குறித்து பேசிய பிரதமர் திரு. மோதி, புத்தர் போதித்த நம்பிக்கை கோட்பாட்டை இந்தியாவின் இளைய தலைமுறையினர் உலகிற்கு முன்னோடியாக செயல்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார். இந்தியாவில் உள்ள புத்தமத புனித தலங்களில் அதிக அளவிலான துறவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் திரு. மோதி தெரிவித்தார்.