லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு விவகாரம் - மக்கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Jul 3 2020 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்கள் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக லடாக் மக்கள் கூறும் நிலையில், அதற்கு மாறாக, யாரும் நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் திரு. மோதி தெரிவிப்பதாக திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
லடாக் விவகாரம் குறித்து திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லடாக் பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட நிலப்பரப்பை சீனப் படைகள் ஆக்கிரமித்துவிட்டதாக அங்கு வாழும் மக்கள் சிலர் கூறும் வீடியோ பதிவை இணைத்துள்ளார். மேலும், லடாக்கில், சீனப் படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பிரதமர் திரு. மோதி கூறுவதாகவும், ஆனால், லடாக் பகுதி மக்களோ தங்கள் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, லடாக் விவகாரத்தில் யாரோ ஒருவர் பொய் சொல்கிறார் என்று திரு. ராகுல் குறிப்பிட்டுள்ளார்.