வரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
Jul 3 2020 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இம்மாதம் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ம் தேதிவரை சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 31-ம் தேதி வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், சரக்கு விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.