டெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
Jul 3 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில், கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி LNJP மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் அசீம் குப்தா, கொரோனாவால் அண்மையில் உயிரிழந்தார். மருத்துவரின் இல்லத்திற்கு இன்று சென்ற முதலமைச்சர் திரு. கெஜ்ரிவால், அவரது குடும்பத்தினரிடம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில், கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
இருந்தபோதிலும், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும், எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, டெல்லி இயல்பு நிலைக்கு திரும்பியபோது, 60 ஆயிரம் நோய் தொற்றுகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது 25 ஆயிரம் பேர் மட்டுமே சிசிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். இந்த நிலையானது டெல்லி மக்கள் மற்றும் அரசின் கூட்டு முயற்சியால் சாத்தியமானதாக தெரிவித்தார்.