ஆஸ்திரேலியாவுடனான உறவு வலுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி
Jun 4 2020 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். End GFX
இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோதியும், ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison-னும் முதல் முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர். End GFX
இதில் உரையாற்றிய பிரதமர் திரு. மோதி, ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும், இது இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு முக்கியமானது என்ற குறிப்பிட்டுள்ளார். End GFX
கொரோனா பாதிப்பு நெருக்கடியை, ஒரு வாய்ப்பாக பார்க்க இந்திய அரசு முடிவு எடுத்துள்தாகவும், அனைத்து பகுதிகளிலும் விரிவான சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, விரைவில் கொரோனாவின் தாக்கம் முறியடிக்கப்படும் என தெரிவித்தார். End GFX
இந்தியா - ஆஸ்திரேலியா உறவுகளை மேலும் வலுப்படுத்த இது சரியான நேரம- நட்பை வலுப்படுத்த எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன- இருநாட்டு உறவு பிராந்தியத்திற்கான ஸ்திரத்தன்மைக்கு ஒரு காரணியாகிறது எனவும் பிரதமர் திரு. மோதி குறிப்பிட்டுள்ளார்.
உம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison, இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவை பலப்படுத்த இது உகந்த நேரம் இது என கூறியுள்ளார்.