ஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு

Jun 4 2020 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு காலத்தில், தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டு விட்டதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தனியார் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது ; ஆட்கு‌‌றைப்பு கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பல்வேறு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில், ஊரடங்கால் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முழு ஊதியத்தை வழங்குவது கடினம் என்றும், எனவே மத்திய அரசு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதே போல், முழு ஊதியத்தை வழங்கக்கோரி ஊழியர்கள் சார்பிலும் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டு விட்டதாகவும், இது 54 நாட்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருந்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. தொடர்ந்து அனைத்துதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00