இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் - குணமடைவோர் விகிதம் 48 புள்ளி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்

Jun 4 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48 புள்ளி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4,776 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதேபோல், குணம் அடைவோர் சதவிகிதம் 48.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்போர் சதவிகிதம் 2 புள்ளி 80 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கொரோனா பரிசோதனைத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் 480 அரசு ஆய்வுக்கூடங்கள், 208 தனியார் ஆய்வுக்கூடங்கள் உட்பட மொத்தம் 688 ஆய்வுக்கூடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 41 லட்சத்து 3 ஆயிரத்து 233 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா மேலாண்மைக்கான சுகாதாரக் கட்டமைப்பைப் பொறுத்தவரை நாட்டில், தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் 952 மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 332 தனிப்படுக்கைகளும், 21 ஆயிரத்து 393 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், வெண்டிலேட்டர் உதவி கொண்ட 72 ஆயிரத்து 762 படுக்கைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00