மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா - வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்
Jun 4 2020 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசுத்துறையின் முக்கிய நபர்களுக்கும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறையில் பலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு வழிக்காட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குழந்தை நல அமைச்சம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளரான திரு. அஜய் குமாருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகமும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.