கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Jun 2 2020 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் திரு. மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர்கள் திரு. நிதின் கட்கரி, திரு. பிரகாஷ் ஜவடேகர், திரு. நரேந்திர தோமர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். 2 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சாலையோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்திற்கும், குறு நிறுவனங்களின் நிதி வரையறையை 25 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.