நாடாளுமன்ற மைய அரங்கில் மழைக்காலக் கூட்டத்தொடர்? : மக்களவை, மாநிலங்களவை சார்பில் ஆலோசனை
Jun 1 2020 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த, மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், இம்மாத இறுதியில் தொடங்க வேண்டிய நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வசதியாக, மழைக்காலக் கூட்டத்தொடரை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனினும், கூட்டத்தொடரின் முதல்நாளில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையில் இரு அவைகளின் உறுப்பினர்களையும் ஒன்றாக அமரவைக்க முடியாது என்பதால், காணொலி மூலம் அதனை நடத்த முடியுமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.