கொரோனா பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சி இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே பொன்னான அத்தியாயம் : பிரதமர் மோதிக்கு நன்றி யஸ்வந்த் சின்ஹா கிண்டல்
Jun 1 2020 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தாக்குதல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தை கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவிப்பதாக, முன்னாள் நிதியமைச்சர் திரு.யஸ்வந்த் சின்ஹா கிண்டலாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான திரு.யஸ்வந்த் சின்ஹா, கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ.க.விலிருந்து விலகினார். குடியுரிமை திருத்தச் சட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களில், இவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே பொன்னான அத்தியாயத்தை அறிமுகப் படுத்தியதற்கு பிரதமர் மோதிக்கு நன்றி என தெரிவித்துள்ளார். கொரோனா தாக்குதலில் முதலிடத்தை பிடித்து அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக அமையும் எனவும், அப்போது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சி அடைந்திருக்கும் எனவும், திரு.யஸ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.