புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியருக்கு கொரோனா தொற்று எதிரொலி - சட்டப்பேரவை கட்டடம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை
Jun 1 2020 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி தலைமைச் செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சட்டப்பேரவை வளாகம் முழுவதும்கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றன. முதலமைச்சர் அறை, சட்டப்பேரவை அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் திரு. நாராயணசாமி உள்ளிட்ட அனைவரும் பரிசோதனைக்குப் பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.