புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73ஆக அதிகரிப்பு
Jun 1 2020 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத்துறை இயக்குனர் திரு.மோகன்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் நோய்தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தினார்.