புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்தீர்கள்? : பிரதமருக்கு கபில் சிபல் கேள்வி
May 31 2020 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவுக்கான " PM cares" நிவாரண நிதியில் இருந்து, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மனதின் குரல் எனப்படும் "மன் கி பாத்" நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோதி, புலம்பெயர் தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான திரு.கபில் சிபல், " PM cares" நிவாரண நிதியில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்த அவர், இந்த ஊரடங்கு காலத்தில், எராளமான மக்கள் நடந்து செல்லும் போதும், ரயில் பயணத்திலும், பசியினானாலும் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.