கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை : கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்

May 31 2020 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்று சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகள் மிக அதிக கட்டணம் வசூப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'லோக்கல்சர்க்கிள்' என்ற சமூக வலைதளம், 40 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. 46 சதவீத மக்கள், அரசு மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அஞ்சுவதாக தெரிவித்தனர். ஏனெனில், அரசு மருத்துவமனைகளில் குவியும் அதிகளவு கூட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமை உள்ளிட்ட காரணிகளை அவர்கள் முன்வைத்தனர்.

மேலும், 32 சதவீத மக்கள், கொரோனாவை கையாளும் அளவிற்கு போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு நாட்டில் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், 16 சதவீத மக்கள், சிகிச்சை மற்றும் பரிசோதனை தொடர்பான அதிககாலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்ற குறையை தெரிவித்தனர்.

மேலும், நோய் தொற்று ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கே செல்ல விரும்புவதாக 32 சதவீதம் பேரும், அரசு மருத்துவமனைக்கு செல்ல விரும்புவதாக 22 சதவீதம் பேரும், மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை என்று 32 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00