நாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

May 31 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தாக்‍கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் இதுவரை 7 ஆயிரத்து 645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பஞ்சாபில் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கினை நீட்டிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும் தளர்வுகள் பற்றி அறிவித்த அவர், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதே போல ஊரடங்கினை நிபந்தனைகளுடன் கூடிய கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்க மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00