இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் அபாயம் - ஐ.நா உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
May 29 2020 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் அபாயம் உள்ளதாக, ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட பாலைவன வெட்டுக்கிளிகள், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி வருகின்றன. அங்கிருந்து பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அடுத்ததாக தென் மாநிலங்களுக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கக்கூடும் என ஐ.நா உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.