நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பா? - உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை
May 29 2020 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவுடன், பிரதமர் திரு. நரேந்திர மோதி அவசர ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31-ம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவடைய இரண்டு நாட்களே உள்ள நிலையில், நேற்றிரவு, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவரது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 15-ம் தேதி வரை ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.