இந்திய - சீன எல்லை விவகாரத்தில், நடப்பது என்ன? - வெளிப்படையாக தெரிவிக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
May 29 2020 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய - சீன எல்லை விவகாரத்தில், என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இந்திய - சீன எல்லைகளான சிக்கிம், லடாக் ஆகிய பகுதிகளில், இந்தியா - சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து, சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய - சீன எல்லை விவகாரத்தில், என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், முக்கிய பிரச்சனைகளில், மத்திய அரசு மவுனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.