புதுச்சேரியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையை மூவர் கைது

May 29 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையை மூவரை, தனிப்படை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கேரளாவில், ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த நிசார் என்பவர், தனது நண்பர்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாயை கடனாகக் கொடுத்துள்ளார். உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் நண்பர்களை எச்சரித்திருந்தார். இதனால் அவரைக் கொலை செய்ய முடிவு செய்த நண்பர்கள் மூவரும், பணத்தை திருப்பிக் கொடுப்பதாகக் கூறி, சமரச நகருக்கு வரவழைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த நிசாரை, ஷாஜகான், அப்பு ஆகியோர் வெட்டிக் கொலை செய்துவிட்டு, மற்றொரு நண்பரான குமரேசனுடன் தப்பியோடி விட்டனர். சின்ன கோட்டக்குப்பம் கிராமத்தில் பதுங்கியிருந்த அவர்களை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி கெளரவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00