கேரளாவில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று : முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்
May 29 2020 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் நேற்று மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக முதலமைச்சர் திரு. பினராய் விஜயன் தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கேரளாவில் கண்டறியப்பட்டபோதிலும் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் வைரஸ் தொற்றை அம்மாநிலம் கட்டுக்குள் கொண்டுவந்தது. தற்போது பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வருவோருக்கு கொரோனா வைரஸ் அதிகம் காணப்படுகின்றன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 5 பேர் தவிர மற்ற அனைவரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதுவரை கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 88 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் நோய் பரவலும், மரணமும் மிகவும் குறைவு என குறிப்பிட்ட திரு. பினராய் விஜயன், ரளாவில் கொரோனா சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ளவர்களிடமிடம் தினமும் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.