சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் நீட்டிப்பு - 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரித்தது ரயில்வே அமைச்சகம்
May 29 2020 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களாக நீட்டித்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், நாடு முழுவதும் வரும் ஒன்றாம் தேதியில் இருந்து 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டித்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 200 சிறப்பு ரயில் மற்றும் ராஜதானி ரயில் என 230 ரயில்களிலும் பார்சல் மற்றும் லக்கேஜ் ஆகியவை அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி காலை 8 மணி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.