சீனாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இந்தியா பதில்
May 29 2020 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - சீனா தொடர்பான எல்லை பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இப்பிரச்சனையை தீர்க்க சீன அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் சீனா ராணுவத்தினர் நடமாட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, போர்ப்பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் திரு.அனுராக் ஸ்ரீவஸ்தவா, சீனாவுடன் ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக தீர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். ராணுவ மட்டத்தை தாண்டி தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், நமது இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிச்சயம் பாதுகாப்போம் எனவும், திரு.அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.