ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சர்ச்சை : HCQ மருந்து போதுமான அளவு உள்ளதா? - மாநில அரசுகளிடம் தகவல் கேட்ட மத்திய அரசு
May 26 2020 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு, உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், மாநில அரசுகளிடம் அந்த மருந்தின் கையிருப்பு போதுமான அளவு உள்ளதா என மத்திய அரசு கேட்டுள்ளது.
கொரோனா போரில், முன்னணியில் செயல்படும் சுகாதார பணியாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் கையிருப்பு, மாநில அரசுகளிடம் போதுமான அளவு உள்ளதா என மத்திய அரசு இன்று கேட்டுள்ளது. இதுகுறித்து முழுமையான தகவல் கிடைத்தால் மட்டுமே, மாநிலங்களுக்கு தேவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த மருந்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகக் கூறி, அதற்கு தற்காலிக தடை விதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.