கொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பா? - மத்திய அரசு தீவிர பரிசீலனை
May 26 2020 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பு அதிமாகி வரும் சூழலில், தேசிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, 4-ம் கட்டமாக வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வைரஸ் தொற்று கட்டுக்குள் வராமல், தொடர்ந்து அதிகரித்து வருதால், வரும் ஜூன் 15-ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.