வெளிமாநிலத்தில் இருந்து வரும் மக்கள் மீது பழிபோடும் வகையில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் செயல்படுகிறார் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
May 26 2020 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிமாநிலத்தில் இருந்து வரும் மக்கள் மீது பழிபோடும் வகையில், உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் தவறான தகவல்களை பரப்பி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பும் மக்களால் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக, அம்மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். மகாராஷ்டிராவில் இருந்து திரும்பும் மக்களில் 75 சதவீதம் பேருக்கும், டெல்லியில் இருந்து திரும்பும் 50 சதவீதம் பேருக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து வரும் மக்கள் மீது பழிபோடும் வகையில் முதலமைச்சர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரியான முறையில் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் திருமதி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.