தேசிய ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - கொரோனா தடுப்பு நடவடிக்கையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் கண்டனம்
May 26 2020 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவும் சமயத்தில் ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாதான் என்றும், தேசிய ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாகவும் திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா தொடர்பாக, காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த திரு. ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வரும் சூழலில் ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாதான் என்றும், தேசிய ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாகவும் விமர்சித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் திரு. ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.